பயணியர் நிழற்குடை திறப்பு விழா
மல்லாங்கிணர் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.


மல்லாங்கிணர் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.
திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் மல்லாங்கிணர் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை திறப்புவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திறப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் நாகையா, செயல் அலுவலர் ஜவஹர், முன்னாள் துணைத் தலைவர் போஸ், தி.மு.க. நகரச் செயலர்கள் செந்தில், முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஒன்றியச் செயலர்கள் போஸ், சண்முகச்சாமி, பொன்னுதம்பி, பொதுக்குழு உறுப்பினர் தேவர் முன்னிலை வகித்தனர்.
திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு புதிய நிழற்குடை மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சம்பத், வையம்பட்டி வேல்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்ணன், சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...