தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி

பட்டா மாறுதல் உத்தரவு வழங்கும் முறையில், ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், வட்டாட்சியர் பொன்ராமர் தலைமையில் நடைபெற்றது.

Updated On :3 மார்ச் 2014, 6:49 pm

பட்டா மாறுதல் உத்தரவு வழங்கும் முறையில், ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வழங்கிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க, கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், வட்டாட்சியர் பொன்ராமர் தலைமையில் நடைபெற்றது.

 காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பட்டா மாறுதல் கேட்டு வரும் விண்ணப்பங்களில், கிரையம் கொடுத்தவர், கிரையம் பெற்றவர்களின் மொபைல் எண் அவசியம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

  சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டா மாறுதல் மனுக்கள், சார்பதிவாளர் அலுவலக பணியாளரால், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்கப்படும். அதிலும் சம்மந்தப்பட்டவர்களின் மொபைல் எண் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

  பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் பட்டா மாறுதல் மனுக்கள், சரிபார்க்கப்பட்டு, தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு மனுவுக்கும் பகிர்மான பதிவேட்டு எண் வழங்கப்படும். விண்ணப்பங்களில் உரிய இணைப்புகள் இல்லாத பட்சத்தில், அந்த ஆவணங்களுடன் மீண்டும் மனு செய்ய கடிதம் அனுப்பப்படும்.

  ஒவ்வொரு வியாழக்கிழமையும் கிராம கணக்குடன் ஆஜராகும் வி.ஏ.ஓ.விடம், ஆர்.டி.ஆர்., எஸ்.டி.ஆர்., மனுக்கள் அளிக்கும்போது, அதற்கான அறிக்கை பெறப்பட்டு, உட்பிரவு ஒரு மாதத்துக்குள்ளும், முழுப்புலம் 15 நாள்களுக்குள்ளும் உத்தரவு வழங்கப்படும். உட்பிரிவு செய்ய சர்வேயர் வரும் நாள், நேரம் குறித்து, மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படும் என, வட்டாட்சியர் பொன்ராமர் தெரிவித்தார்.

  நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியர்கள், 36 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.