தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம்குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம் மனு நூல் நிலையத்தில் நடைபெற்றது.

Updated On :4 ஜனவரி 2014, 6:43 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம் மனு நூல் நிலையத்தில் நடைபெற்றது.

மைய அமைப்பாளர் கமலவேணி தலைமை தாங்கினார். உமா முன்னிலை வகித்தார். திட்ட ஊக்குனர் யோகா வரவேற்றுப் பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினார். குழந்தைகள் மையத்தினை எஸ்.பி.எம். அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி தொடங்கி வைத்து பேசினார்.

  மனுநூல் நிலைய நிறுவனர் பரதன், விவேகானந்தா சேவாலய தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் மகளிர் குழு அமைப்பாளர்கள், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெண்களிடம் கருத்துகள் கேட்டறிந்து மையத்தின் செயல்பாடுகள் பற்றி குழு விவாதம் நடத்தப்பட்டது.

   குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பு சார்பில் பெண்களின் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபடுவது என்றும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது என்றும், பெண்களின் தனி வருமானத்தை, பெருக்கும் வகையில் இலவச தொழிற்பயிற்சிகள் நடத்துதல், மகளிர் குடும்ப ஆலோசனை மையம் மற்றும் இலவச சட்ட உதவி மையம் நடத்துதல், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, இளவயது திருமணங்களை தடுத்தல், பாலியல் வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்து செல்லுதல் போன்ற பணிகளை செய்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

   முடிவில் களப்பணியாளர் வெங்கடேஷ்வரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.