டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம்குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம் மனு நூல் நிலையத்தில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:08 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி எஸ்.பி.எம். அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மைய ஆலோசனைக் கூட்டம் மனு நூல் நிலையத்தில் நடைபெற்றது.

மைய அமைப்பாளர் கமலவேணி தலைமை தாங்கினார். உமா முன்னிலை வகித்தார். திட்ட ஊக்குனர் யோகா வரவேற்றுப் பேசினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகவதி மையத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினார். குழந்தைகள் மையத்தினை எஸ்.பி.எம். அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி தொடங்கி வைத்து பேசினார்.

  மனுநூல் நிலைய நிறுவனர் பரதன், விவேகானந்தா சேவாலய தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் மகளிர் குழு அமைப்பாளர்கள், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பெண்களிடம் கருத்துகள் கேட்டறிந்து மையத்தின் செயல்பாடுகள் பற்றி குழு விவாதம் நடத்தப்பட்டது.

   குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பு சார்பில் பெண்களின் கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபடுவது என்றும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது என்றும், பெண்களின் தனி வருமானத்தை, பெருக்கும் வகையில் இலவச தொழிற்பயிற்சிகள் நடத்துதல், மகளிர் குடும்ப ஆலோசனை மையம் மற்றும் இலவச சட்ட உதவி மையம் நடத்துதல், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது, இளவயது திருமணங்களை தடுத்தல், பாலியல் வன்கொடுமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்துகளை பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்து செல்லுதல் போன்ற பணிகளை செய்வது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

   முடிவில் களப்பணியாளர் வெங்கடேஷ்வரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.