தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மல்லாங்கிணர்: மர்ம காய்ச்சலால் 60 பேர் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் மர்ம காய்ச்சல்  தாக்கியதில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

Updated On :24 பிப்ரவரி 2014, 6:36 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் மர்ம காய்ச்சல்  தாக்கியதில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

  இப் பகுதியில் உள்ள திம்மன்பட்டி கிராமத்தில் கடந்த 5 நாள்களாக கடுமையான காய்ச்சல் பரவியதில் 60-க்கும் மேற்பட்டோர் மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 30-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  விருதுநகர் தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திம்மன்பட்டி வார்டு கவுன்சிலர் வீரலெக்கன் கூறியதாவது: கடந்த ஒரு வாரகாலமாக திம்மன்பட்டியில் பலர் மர்ம காய்ச்சல் தாக்கி பாதிப்படைந்துள்ளனர். நோயாளிகளுக்கு மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்டோர் விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

   தற்போது பாண்டி (50), பன்னீர் (45), கணேசன் (26), ஒச்சம்மாள் (40), மூக்கன் (30) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

  இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மர்மகாய்ச்சல் நோய் குறித்து மல்லாங்கிணர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.