மல்லாங்கிணர்: மர்ம காய்ச்சலால் 60 பேர் பாதிப்பு
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் மர்ம காய்ச்சல் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் மர்ம காய்ச்சல் தாக்கியதில் 60-க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
இப் பகுதியில் உள்ள திம்மன்பட்டி கிராமத்தில் கடந்த 5 நாள்களாக கடுமையான காய்ச்சல் பரவியதில் 60-க்கும் மேற்பட்டோர் மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 30-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திம்மன்பட்டி வார்டு கவுன்சிலர் வீரலெக்கன் கூறியதாவது: கடந்த ஒரு வாரகாலமாக திம்மன்பட்டியில் பலர் மர்ம காய்ச்சல் தாக்கி பாதிப்படைந்துள்ளனர். நோயாளிகளுக்கு மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாததால் 50-க்கும் மேற்பட்டோர் விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது பாண்டி (50), பன்னீர் (45), கணேசன் (26), ஒச்சம்மாள் (40), மூக்கன் (30) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மர்மகாய்ச்சல் நோய் குறித்து மல்லாங்கிணர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...