தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருச்சுழி பகுதியில் மிளகாய் சாகுபடி

மிளகாய் நல்வழி சாகுபடி பண்ணைப்பள்ளி சார்பில், திருச்சுழி அருகே கே2 என்ற வீரிய ஒட்டுரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. எம்.ரெட்டியபட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறையில், அட்மா திட்டத்தின் கீழ்

Updated On :7 பிப்ரவரி 2014, 6:49 pm

மிளகாய் நல்வழி சாகுபடி பண்ணைப்பள்ளி சார்பில், திருச்சுழி அருகே கே2 என்ற வீரிய ஒட்டுரக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. எம்.ரெட்டியபட்டி வட்டாரத்தில் வேளாண்மை துறையில், அட்மா திட்டத்தின் கீழ் மிளகாய் சாகுபடி பண்ணைப்பள்ளி ஆலடிபட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளியாக மிளகாய் சங்கத்தின் கீழ் உள்ள உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரிய ஒட்டுரக மிளகாய் (கே2) சாகுபடி திடல் பண்ணைப்பள்ளி ஆசிரியர் செல்வன ஜேக்கப் வயலில் அமைக்கப்பட்டது. பண்ணைப்பள்ளி அமைத்துள்ள செல்வன் ஜேக்கப்புக்கு வேளாண்மை விரிவாக்க மையம், எம்.ரெட்டியபட்டியில் அட்மா திட்ட இயக்குநர் சுப்பையா மிளகாய் செயல்விளக்க திடலுக்கு தேவையான இடுபொருட்கள் வழங்கினார். இடுபொருட்களாக டிஏபி, யூரியா, பொட்டாஷ், மண்புழு உரம், இமிடாகுளோபிரிட், விதை நேர்த்தி செய்வதற்கு தேவையான சூடோமோனஸ், டிரைகோ டெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவை வழங்கப்பட்டன. உரங்களை தேவையான நேரத்தில், தேவையான அளவு உபயோகிப்பதன் மூலம் நல்ல மகசூல் பெறலாம் என்று வேளாண்மை உதவி இயக்குநர், எம்.ரெட்டியபட்டி நாச்சியாரம்மாள் விளக்கிக் கூறினார். ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் பிரேமா, மாரியம்மாள் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.