தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கார் மீது லாரி மோதல்: நகைக்கடை அதிபர் மனைவி சாவு; 4 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை கார் மீது மணல் லாரி மோதியதில் தூத்துக்குடி நகைக்கடை உரிமையாளர் மனைவி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

Updated On :24 செப்டம்பர் 2013, 6:47 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை கார் மீது மணல் லாரி மோதியதில் தூத்துக்குடி நகைக்கடை உரிமையாளர் மனைவி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

  தூத்துக்குடியில் அழகர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வருபவர் பாலாஜி(40). இவர் தனது மனைவி நர்மதா, தாய் தனலட்சுமி, தந்தை கணேசன் ஆகியோருடன் காரில் சென்னை மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து விட்டு தூத்துக்குடி வந்து கொண்டிருந்தார். மாலை 6 மணி அளவில் திருத்தங்கலைச் சேர்ந்த மணல் லாரி காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி மணல் குவாரியில் மணல் அள்ள வந்து கொண்டிருந்தது. மணல் லாரி கல்குறிச்சி அருகேயுள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றபோது கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த நர்மதா (34) சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் வந்த பாலாஜி, தனலட்சுமி, கணேசன், கார் டிரைவர் கட்டபொம்மன் ஆகிய 4 பேரும் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி மல்லாங்கிணர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணல் லாரி டிரைவர் மாரியப்பனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.