சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சுழியில் இளைஞர் பெருமன்ற மாநாடு

  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய மாநாடு திருச்சுழியில் நடைபெற்றது. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கணேஷ்குமார், அழகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில்குமார்

News image
Updated On :3 ஜனவரி 2024, 5:52 pm

கல்யாணி வெங்கடராமன்

  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய மாநாடு திருச்சுழியில் நடைபெற்றது. ஜீவானந்தம் தலைமை வகித்தார். கணேஷ்குமார், அழகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில்குமார் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, நரிக்குடி ஒன்றியச் செயலாளர் பெரியண்ணன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், தாலுகா செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில், திருச்சுழி குண்டாறு பகுதியில் அணைகட்டி, பெரிய கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சுழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். எம்.ரெட்டியபட்டி - கிருஷ்ணாபுரம் சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.