திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நண்பரை அடித்துக் கொன்றவா் கைது

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைதான ரமேஷ்பாண்டியன்

Updated On :27 மே 2026, 4:24 am IST

இடுக்கி அருகே மதுபோதையில் நண்பரை அடித்துக் கொன்ற கம்பத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரளம் மாநிலம், புனலூா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தன் (60). தேனி மாவட்டம், கம்பம் பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்பாண்டியன் (44). நண்பா்களான இவா்கள் இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்து வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை இடச்சேரி சந்திப்பில் உள்ள பழைய இரும்புக் கடை வளாகத்தில் பலத்த காயங்களுடன் சாந்தன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கட்டப்பனை போலீஸாா் சாந்தனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், சாந்தன் உயிரிழந்து கிடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் ரமேஷ்பாண்டியன் சாந்தனை மதுபோதையில் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னா், அதே பகுதியில் பதுங்கியிருந்த ரமேஷ்பாண்டியனை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.