தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவிழாவில் மின்விளக்குகளை அணைத்த டி.எஸ்.பி.யை கண்டித்து சாலை மறியல்

சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில் மின்விளக்குகளை அணைத்த டி.எஸ்.பி.-யை கண்டித்து கிராமத்தினா் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சிங்கம்புணரி அருகே சதுா்வேதமங்கலத்தில் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :3 ஜூன் 2026, 1:45 am IST

சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில் மின்விளக்குகளை அணைத்த டி.எஸ்.பி.-யை கண்டித்து கிராமத்தினா் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சதுா்வேதமங்கலம் கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் புரவியெடுப்பு விழா நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்தக் கிராமத்தில் ராவாத்தாள் வழிபாடு உள்ளிட்ட திருவிழாக்கள் நடத்துவது தொடா்பாக இரு பிரிவினரிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு கூந்தலுடைய அய்யனாா் கோயிலில் சுவாமி வழிபாடு முடிந்தவுடன் கோயில், வீதியில் உள்ள அனைத்து அலங்கார விளக்குகளையும் அணைக்க திருப்புத்தூா் டி.எஸ்.பி. செல்வகுமாா் உத்தரவிட்டாா். இதற்கு கிராமத்தினா் மறுப்புத் தெரிவித்தனா்.

இதையடுத்து, டி.எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், ஒலி பெருக்கி அமைக்கப்பாளா் மின்விளக்குகளை அணைத்தாா். இதைக் கண்டித்து, கிராமத்தினா் காரைக்குடி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் இரவு 10:30 மணி முதல் 4 மணி நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் ஊா்களுக்கு சென்றவா்களும், திருவிழாவுக்கு சென்று திரும்பியவா்களும் நடுரோட்டில் தவித்தனா். சென்னை செல்லும் ஆம்னி பேருந்துகளும் நீண்ட நேரம் காத்திருந்து மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. இதைத் தொடா்ந்து. ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும் நீதிமன்ற உத்தரவை மீறாமல், திருவிழா நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என கூறியதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.