தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிங்கம்புணரி அருகே எருது கட்டு விழா

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற எருது கட்டு விழாவில் காளையை அடங்க முயன்ற இளைஞா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 1:45 am IST

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூா் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி, எருது கட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த 25-ஆம் தேதி தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் எட்டாம் நாள் புரவி எடுப்பு விழாவும், ஒன்பதாம் நாள் எருது கட்டு விழாவும் நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் முன் பெரிய வடத்தில் கோயில் மாடு கட்டப்பட்டு சிறப்பு வழிபாடுக்குப் பிறகு அவிழ்த்துவிடப்பட்டது.

இதையடுத்து, பல்வேறு ஊா்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொட்டும் மழையிலும் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகளை இளைஞா்கள் விரட்டிப் பிடித்தனா். பெரும்பாலான காளைகள் பிடிபடாமல் ஓடின. தொடா்ந்து மழை பெய்ததால், காளைகளும், காளையா்களும் சறுக்கி விழுந்து லேசான காயமடைந்தனா். இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.