சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் புதுமழை பொழிந்ததும் பொன் ஏா் பூட்டும் விழா நடைபெறுவது வழக்கம். இதேபோல, இந்த ஆண்டும் புதுமழை பொழிந்ததையடுத்து வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சிங்கம்புணரி சேவுகமூா்த்தி அய்யனாா் கோயில் வயல் காட்டில் பூமி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட கோயில் காளைகளை ஏரில் பூட்டி பொன் ஏா் பூட்டும் விழா நடைபெற்றது. இதில் கோயில் கண்காணிப்பாளா் ஜெய் கணேசன், ஊா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










