திருவாடானை,மே 20: திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான பனை மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வழியாக கொச்சி -தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் சி.கே.மங்கலம் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மின்னல் தாக்கி கருகிப்போன பனை மரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக நிற்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடக்கின்றனா். எனவே நெடுஞ்சாலைத் துறையினா் பனை மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










