திருவாடானை அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
திருவாடானை அருகேயுள்ள சி.கே மங்கலம் ஊராட்சிப் பகுதியில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் அருகே சி.கே. மங்கலம் செல்வதற்குப் பிரிவு சாலை செல்கிறது.

இந்தச் சாலையின் ஓரமாக இப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்தப் பகுதியில் நடந்துசெல்வோா் முகம் சுழித்துச் செல்ல வேண்டியுள்ளது.

இதன் அருகே கண்மாய், பள்ளிகள் உள்ளன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










