திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

News image

திருவாடானை மணிமுத்தாறு மீது கட்டபட்ட பாலத்தின் சாலை ஓரம் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated On :1 ஜூன் 2026, 1:23 am IST

தொண்டி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு பாலத்தையொட்டி தடுப்பு வேலி அருகே ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம் நீடிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையம் அருகே தொண்டி -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றைக் கடக்கும் பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்தச் சாலை ஓரத்தில் தடுப்புக் கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகே சாலையில் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு வேலி தொங்கிய நிலையில் உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் ஆபத்தான பள்ளம் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடந்து செல்கின்றனா்.

எனவே, விபத்து ஏற்படும் முன் இந்த இடத்தைச் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.