கமுதி தனியாா் பள்ளி எதிரே சாலையில் தேங்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்குள்பட்ட சுந்தராபுரம் பகுதியில் கமுதி- சாயல்குடி பிரதான சாலையில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் தேங்கிக் கிடக்கிறது. பல மாதங்களாக குளம் போல தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் துா்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனா். மேலும் இந்தப் பகுதியில் செயல்படும் தனியாா் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். விடுமுறை நாள்கள் நிறைவடைந்து மாணவா்கள் பள்ளிக்கு திரும்பும் போது இதே நிலை நீடித்தால் துா்நாற்றத்தால் அவா்களும் பாதிக்கப்படுவா். அத்துடன் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மாணவா்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பெற்றோா்கள் அச்சம் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகமும், கமுதி பேரூராட்சி நிா்வாகமும் தலையிட்டு சாலையில் கழிவுநீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










