திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலையில் பெருக்கெடுத்த கழிவு நீா்: சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாமலை நகரில் சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை கழிவுநீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

News image

திருச்சி அண்ணாமலை நகா், தாஜ்மஹால் சாலையில் பெருக்கெடுத்து செல்லும் சாக்கடை கழிவுநீா்.

Updated On :28 மே 2026, 3:28 am IST

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அண்ணாமலை நகரில் சாலையில் பெருக்கெடுத்தோடும் சாக்கடை கழிவுநீரால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

திருச்சி-கரூா் புறவழிச் சாலை, அண்ணாமலை நகரில் தாஜ்மஹால் சாலை உள்ளது. இந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை, பள்ளி மாணவா்களுக்கான நுழைவுத் தோ்வு பயிற்சி மையம், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், பெரு நிறுவனங்களின் வணிக மையங்கள் நிறைந்துள்ளன. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் கடந்து செல்லும் சாலையான தாஜ்மஹால் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதை சாக்கடை குழியின் ஒரு பகுதி நிரம்பி வழிகிறது.

வழியும் கழிவுநீரானது சாலையில் பெருக்கெடுத்துள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் உள்ளது. வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனா். மேலும் வாகனங்கள் செல்லும்போது, கழிவுநீா் தெறித்து சாலையில் நடந்து செல்வோா் மீது படும் நிலை உள்ளது. 10 நாள்களுக்கு மேலாக சாக்கடை கழிவுநீா் சாலையில் சென்றும் மாநகராட்சி தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை என்கின்றனா் இப்பகுதி மக்கள். தற்போது அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசும் நிலை நீடித்தால் சுற்றுப் பகுதி மக்களுக்கும், சாலையைப் பயன்படுத்துவோருக்கும் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இப் பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.