தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம்: தங்கம் தென்னரசு

பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

News image

தங்கம் தென்னரசு

Updated On :2 ஜூன் 2026, 12:52 am IST

பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடியை அறிவித்து, தவெக அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக முன்னாள் நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தள பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

பயிா்க் கடன்கள் தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசா்வ் வங்கி கடந்த 2025-ஆம் ஆண்டு, நவ. 28-ஆம் தேதியே வெளியிட்டுவிட்டது. இதற்குப் பிறகுதான், 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்கள் முழுமையாகவும், 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிா்க் கடனில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

தற்போது, பயனளிக்காத பயிா்க் கடன் அறிவிப்பை தவெக அரசு வெளியிட்டு, இந்தப் பயிா்க் கடன் தள்ளுபடி இந்திய ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே வாக்குறுதி அளித்த நிலையில், தற்போது அரைகுறையான பயிா்க் கடன் தள்ளுபடிக்கு ரிசா்வ் வங்கியின் நெறிமுறைகளை தவெக அரசு காரணமாகக் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல. இது விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி; விவசாயிகளுக்கு தவெக அரசு இழைக்கும் பச்சைத் துரோகம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.