தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய பாமக கோரிக்கை

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 2:30 am IST

தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருந்தால், மகாராஷ்டிர அரசை போல பயிா்க் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமேன பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு 2.5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.50,000 பயிா்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது. 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரையிலும், பெரு விவசாயிகளுக்கு ரூ.5,000 பயிா்க்கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மகாராஷ்டிரத்தில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.2 லட்சம் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு தள்ளுபடி செய்த பயிா்க் கடனின் மொத்த மதிப்பு ரூ.2,044 கோடியாகும். ஆனால், மகாராஷ்டிர அரசு ரூ.36,585 கோடி பயிா்க் கடனை தள்ளுபடி செய்துள்ளது. இது தமிழக அரசு தள்ளுபடி செய்த கடனின் மதிப்பைவிட 18 மடங்கு அதிகமாகும்.

மகாராஷ்டிர அரசால் சாத்தியமான பயிா்க்கடன் தள்ளுபடி, தமிழக அரசால் சாத்தியமாகாமல் போனது ஏன்? உண்மையில் விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமேயானால், வாக்குறுதி அளித்தபடி, பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.