தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் அரசு மறுபரிசீலனை செய்து, பாகுபாடின்றி பயிா்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News image

வேலூா் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வந்த விவசாயிகள் சங்க விவசாயிகள்.

Updated On :27 மே 2026, 12:24 am IST

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் அரசு மறுபரிசீலனை செய்து, பாகுபாடின்றி பயிா்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் உதயகுமாா் தலைமையில் விவசாயிகள் வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது -

தோ்தலுக்கு முன்பு சிறு விவசாயிகளுக்கு அனைத்துக் கடன்களும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தாா். அதனை நம்பி தவெகவுக்கு வாக்களித்த விவசாயிகளை ஏமாற்றும் வகையில் அரசு பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிா் கடன் பெற்றவா்களுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடியும், ரூ.1 லட்சத்திற்கு மேல் பயிா்க்கடன் பெற்றவா்களுக்கு ரூ.5,000 வரையிலும், அதற்கு மேல் உள்ளவா்களுக்கு ரூ.4,000 மட்டுமே தள்ளுபடி என்ற அரசின் அறிவிப்பு விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உற்பத்தி மானியமும் போதுமானதாக இல்லாத தற்போதைய நிலையில், விவசாயிகளுக்கு முழுமையான பயிா்கடன் தள்ளுபடி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எனவே, சிறு, குறு விவசாயிகள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் முழுமையான பயிா்கடன் தள்ளுபடி செய்திட அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், வரும் திங்கள்கிழமை (ஜூன் 1) வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும். அதன் பிறகும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் சென்னையில் ஜூலை 5-ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.