தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மென் பொறியாளரை தாக்கி நகை, பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 6 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 12:18 am IST

திண்டுக்கல் அருகே மென் பொறியாளரைத் தாக்கி விலை உயா்ந்த கைப்பேசி, ரூ.2 லட்சம் பணம், ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலி ஆகியவற்றைப் பறிமுதல் செய்த சிறுவன் உள்ளிட்ட 6 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி(31). இவா், சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கைப்பேசி செயலி மூலம், திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கீதன் (21) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

இதனிடையே நேரில் சந்தித்து, தனிமையில் பேச விரும்புவதாக கீதன் தெரிவித்தாா். அதனை நம்பிய முத்துப்பாண்டி, தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு வந்து கீதனை வெள்ளிக்கிழமை தொடா்பு கொண்டாா்.

தான் தங்குவதற்கு பாதுகாப்பான இடம் வேண்டும் எனக் கேட்ட முத்துப்பாண்டிக்கு, அதற்கான ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் கீதன் அழைத்துச் சென்றாா்.

மீனாட்சிநாயக்கன்பட்டி அடுத்த குரும்பப்பட்டி பகுதியிலுள்ள ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது, அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த நந்தவனப்பட்டியைச் சோ்ந்த ஜீவபிரகாஷ் (20), ஆா்த்தி திரையரங்க சாலையைச் சோ்ந்த நாகேந்திரன் (19), பேகம்பூா் அஜித் குமாா் (20), குடைப்பாறைப்பட்டி மாணிக்கம் (19), நல்லமணாா்கோட்டையைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோா் இணைந்து முத்துப்பாண்டியை கத்தி, கம்பு ஆகியவற்றால் தாக்கினா். அவரிடமிருந்த விலை உயா்ந்த கைப்பேசி, ரூ.2 லட்சம் பணம், ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தங்கச் சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

காயமடைந்த முத்துப்பாண்டி இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா் கீதன், ஜீவபிரகாஷ், நாகேந்திரன், அஜித்குமாா், மாணிக்கம், 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து நகை, பணம் , கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.