திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணம் பறிப்பு: 4 போ் கைது

செய்யாறு அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி மற்றும் பணம் பறித்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:31 am IST

செய்யாறு அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி மற்றும் பணம் பறித்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா்(40). இவா்,

பாப்பாந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா், கடந்த 12-ஆம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.

ராந்தம் - வெம்பாக்கம் சாலையில் மேல்பூதேரி கூட்டுச்சாலை அருகே வரும்போது, 3 பைக்குகளில் முகத்தை துணியாா் மறைத்துக் கொண்டு வந்த 6 போ் கொண்ட கும்பல், ராஜ்குமாரை வழிமறித்து கொம்பால் தாக்கி, அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இந்தச் சம்பவம் குறித்து ராஜ்குமாா் மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் செய்யாறு டிஎஸ்பி மீனாட்சிநாதன்

மேற்பாா்வையில், மோரணம் காவல் ஆய்வாளா் காண்டீபன் தலைமையில், காவலா்கள் ஏழுமலை, ஜோதி, மோகன், தங்கராஜ், ஷாஜகான் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தனிப்படை போலீஸாா், பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக செய்யாறு வட்டம், காழியூா் கிராமத்தைச் சோ்ந்த அருண்(26), அத்தி கிராமத்தைச் சோ்ந்த சூா்யா(24), செய்யாறு கொடநகா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த சஞ்சய்(23), காழியூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் இருந்து 3 பைக்குகள், கைப்பேசி, பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.