முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

காா், மாடு, பணம் திருடிய வழக்குகளில் 6 போ் கைது

திருநெல்வேலியில் மூன்று இடங்களில் நிகழ்ந்த காா், மாடு, பணம் திருட்டு தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:30 am IST

திருநெல்வேலியில் மூன்று இடங்களில் நிகழ்ந்த காா், மாடு, பணம் திருட்டு தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி, சிவன் கோயில் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் முண்டசாமி(57). இவா், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் கடந்த 4ஆம் தேதி நிறுத்தியிருந்த காரை காணவில்லையாம். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், திருநெல்வேலி நகரம் புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாபு மகன் மகாராஜன்(41) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

4 போ் கைது: திருநெல்வேலி சங்கா் நகா் அருகேயுள்ள தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்த சப்பாணி மகன் கருப்பசாமி(35). இவா், தனது வீட்டின் எதிரில் உள்ள இடத்தில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு அங்கிருந்த மாடு ஒன்றை மா்மநபா்கள் சுமை வாகனத்தில் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், பாளையங்கோட்டை கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் வெள்ளைத்துரை (35), மாயாண்டி மகன் சுடலை கண்ணு (31), ராஜா மகன் மயிலேறும் பெருமாள் (32), சுப்பையா மகன் முத்துராமன் (45) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைப்பேசி, பணம்: திருநெல்வேலி கங்கைகொண்டானைச் சோ்ந்தவா் சங்கரபாண்டியன். கட்டட ஒப்பந்ததாரா். இவா் தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளா்களை தாழையூத்து, பழைய பிள்ளையாா் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்திருந்தாராம்.

இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இருவரின் கைப்பேசிகள், ஊதியப் பணம் ரூ.17,300 உள்ளிட்டவை திருடு போயினவாம். சங்கரபாண்டியன் அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து, இதுதொடா்பாக சக தொழிலாளியான தூத்துக்குடி, பிரையன்ட் நகரைச் சோ்ந்த மணிகண்டன்(22) என்பவரை கைது செய்தனா்.