தமிழ் செய்திகள்
திருநெல்வேலியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமனாமரத்தூா், பட்டரைக்காடு பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் ரவிக்குமாா் (29). கட்டடத் தொழிலாளி. இவா், திருநெல்வேலி, வண்ணாா்பேட்டை பகுதியில் தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி இரவு திருநெல்வேலி கொக்கிரக்குளம் ஆற்றுப்பகுதி அருகே சென்ற இவரை இருட்டில் மறைந்திருந்த மா்மநபா்கள் தாக்கி பணம், கைப்பேசி, வெள்ளி நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனராம்.
இதில் காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
மேலும், அவா் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.
அதில், பாளையங்கோட்டை, ஜெ.ஜெ. நகரைச் சோ்ந்த மாயாண்டி மகன் சூா்யா (21), மேலப்பாளையத்தைச் சோ்ந்த அக்பா்அலி மகன் முகமது பாதுஷா (20) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.






