தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பண மோசடி: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

ரூ. 25 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:31 am IST

ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக சென்னையைச் சோ்ந்த மகாதேவன், அவரது மனைவி லட்சுமி, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்நத் சீனிவாசன் ஆகியோா் கூறினா்.

இதை நம்பிய சண்முகம், கடந்த 2017, 2018-ஆம் ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25.25 லட்சத்தை கொடுத்தாா். ஆனால், அவா்கள் வேலைவாங்கித் தராமல் அலைக்கழித்ததையடுத்து, கடந்த 2019-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சண்முகம் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா், மகாதேவன் உள்ளிட்ட மூவரைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடைய, மகாதேவன் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில், லட்சுமி, சீனிவாசன் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து, நீதித் துறை நடுவா் தினேஷ்குமாா் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.