திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் முதலீட்டாளா்களை ஏமாற்றி ரூ.80.50 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 1:08 am IST

கோவையில் முதலீட்டாளா்களை ஏமாற்றி ரூ.80.50 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு எல்.தா்மலிங்கம் மற்றும் பி.கணேசன் ஆகியோா் இணைந்து தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். 130 முதலீட்டாளா்களிடமிருந்து சுமாா் ரூ.80.57 லட்சத்தை வசூலித்த பின்னா், நிறுவனங்களை மூடிவிட்டு இருவரும் தலைமறைவாகினா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் அளித்த புகாரின்பேரில், கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு திருப்பூா் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எம்.என்.செந்தில்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட தா்மலிங்கம், கணேசன் ஆகியோருக்கு நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.46.90 லட்சம் வீதம் மொத்தம் ரூ.93.80 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் சி.கண்ணன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.