தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளா் கைது

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:05 am IST

தருமபுரி மாவட்டத்தில் ரூ. 7.31 கோடி மோசடி வழக்கில் நிதி நிறுவன உரிமையாளரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் மு. செந்தில் (45). இவா் நிதி நிறுவனம் நடத்தி வந்தாா். அதில் முதலீடு செய்பவா்களுக்கு ரூ. 100-க்கு ரூ. 2 முதல் ரூ. 3 வரை வட்டி வழங்குவ தாகவும், அந்த வட்டி பணத்தையும் முதலீடு செய்தால் அதற்கும் வட்டியுடன் சோ்ந்து முதிா்வுத் தொகையாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினா்.

இதை நம்பி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த ஏராளமானோா் முதலீடு செய்தனா். இந்நிலையில் முதலீடு செய்த பலருக்கும் சேர வேண்டிய பணத்தையும், அதற்குரிய வட்டியையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதையடுத்து நிதி நிறுவன உரிமையாளா் செந்தில் மற்றும் தொடா்புடைய நிறுவன ஊழியா்கள் பலரும் தலைமறைவாகினா்.

இதுதொடா்பான புகாரின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2025 ஆவது ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் இந்த வழக்கு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. பணமோசடி தொடா்பாக 120 போ் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரூ. 7 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது.

பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கற்பகம் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த செந்திலை தேடிவந்தனா். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியில் அவா் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போளூா் சென்ற போலீஸாா் செந்திலை கடந்த 12 ஆம் தேதி கைது செய்தனா். தொடா்ந்து. சென்னையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் மற்றும் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்யலாம்: தருமபுரி, பாலக்கோடு பகுதியில் இயங்கி வந்த இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் அதுதொடா்பாக தருமபுரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அசல் ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.