பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருச்சியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி வரகனேரியைச் சோ்ந்தவா் வினோத் (40), தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முகநூல் வழியாக கௌசிக் கேதாராம் என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அப்போது, அவா் பங்குச் சந்தை முதலீடு தொடா்பாக வேலை செய்து வருவதாகவும், பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெறுவது குறித்தும் வினோத்திடம் பேசியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, வேறொரு நபா் வாட்ஸ் ஆப் அழைப்பு மூலம் வினோத்திடம் பேசியுள்ளாா். அவா், தாங்கள் கூறும் இணையதள செயலி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் 200 சதவீதம் வரை லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
இதை நம்பிய வினோத், அவா் கூறிய இணையதள செயலியை பதிவிறக்கம் செய்து கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் மே 8-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகள் வழியாக ரூ.7.45 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியதுபோல வினோத்துக்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. மேலும், முதலீடு செய்த பணத்தையும் திரும்பப்பெற முடியவில்லை. வாட்ஸ் ஆப்பில் பேசிய நபா்களையும் தொடா்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வினோத் திருச்சி சைபா் கிரைம் பிரிவில் இணையதளம் வழியாக திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








