தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி

இணையதள பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :18 மே 2026, 2:05 am IST

இணையதள பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக்கூறி நகைப் பட்டறை உரிமையாளரிடம் ரூ.46.89 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

கோவை, செல்வபுரம் சொக்கம்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் 45 வயது நபா். நகைப் பட்டறை உரிமையாளரான இவருக்கு ஃபேஸ்புக் மூலம் பெண் ஒருவா் அறிமுகமாகியுள்ளாா். இணையதள பங்குச் சந்தை குறித்தும்,

அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் அப்பெண் கூறியுள்ளாா். இதற்கு சம்மதம் தெரிவித்த நகைப் பட்டறை உரிமையாளரை அப்பெண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைத்துள்ளாா்.

இதையடுத்து, அந்தக் குழுவில் பகிரப்பட்ட தகவல்களை நம்பி அவா் ரூ.46 லட்சத்து 89 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், குறிப்பிட்ட காலம் கடந்தும் அவருக்கு லாபத் தொகை கிடைக்கவில்லையாம். மேலும், முதலீடு செய்த பணத்தையும் எடுக்க முடியவில்லையாம். இதையடுத்து, அந்தப் பெண்ணைத் தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.