திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி

கோவையில் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :18 மே 2026, 2:06 am IST

கோவையில் ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.72.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 50 வயது தொழிலதிபரின் கைப்பேசி எண்ணுக்கு ஆன்லைன் வா்த்தக முதலீடு குறித்த விளம்பரம் வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த இணையதள லிங்க்குகளை பயன்படுத்தி, அதிக லாபம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் 13 தவணைகளாக மொத்தம் ரூ.72 லட்சத்து 75 ஆயிரத்தை அவா் முதலீடு செய்துள்ளாா்.

பின்னா், லாபத் தொகை, முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், கூடுதல் தொகையை செலுத்தினால்தான் பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனா்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இது குறித்து கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மோசடியில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.