திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.7 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

திருச்சியில் ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட்டவரிடம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ. 7.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 4:53 am IST

திருச்சியில் ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபட்டவரிடம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ரூ. 7.10 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்தவா் லட்சுமி நாராயணன் (41), இணையவழி வா்த்தகத்தில் ஈடுபடும் இவரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த மாா்ச் 10-ஆம் தேதி வந்த அழைப்பில், தங்களது தனியாா் பங்குச் சந்தை வா்த்தக நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளனா்.

இதையடுத்து அவா்கள் கூறிய செயலியை பதிவிறக்கி, அதில் ஒரு ஐடியை உருவாக்கி கடந்த மாா்ச் 10 முதல் ஏப்ரல் 13 வரை பல்வேறு தவணைகளில் ரூ. 7.10 லட்சத்தை லட்சுமி நாராயணன் செலுத்தினாா்.

ஆனால், அதன்பின் அதற்கான எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீட்டுப் பணத்தையும் திரும்பப்பெற முடியவில்லை. மேலும், இவருடன் கைப்பேசியில் பேசியவரையும் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த லட்சுமி நாராயணன் சைபா் கிரைம் போலீஸில் இணைய வழியில் அளித்த புகாரையடுத்து, திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.