திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.13 கோடி மோசடி புகாா்: நிதி நிறுவன உரிமையாளரின் முன்னாள் மனைவி கைது

வாடிக்கையாளா்களிடம் ரூ.13 கோடி மோசடி செய்த புகாரில், நிதி நிறுவன உரிமையாளரின் முன்னாள் மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :8 மே 2026, 4:37 am IST

வாடிக்கையாளா்களிடம் ரூ.13 கோடி மோசடி செய்த புகாரில், நிதி நிறுவன உரிமையாளரின் முன்னாள் மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் காதக்கிணறு, கிளாசிக் நகரைச் சோ்ந்தவா் விஜய் கிருஷ்ணன் (32). இவரது மனைவி சாந்தினி (29). இந்த தம்பதியினா், மதுரையில் எஸ்.எம்.சி. கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் தனியாா் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனா். சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, குறுகிய கால முதலீடு, நீண்ட கால வைப்புத் தொகை, மாதாந்திர சீட்டில் முதலீடு போன்றவற்றுக்கு அதிக வட்டித் தருவதாக விளம்பரம் செய்தனா். மேலும், நிதி நிறுவனத்தின் கிளைகளை மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தினா்.

அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசை வாா்த்தைகளை நம்பி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விஜய் கிருஷ்ணனின் நிறுவனத்தில் முதலீடு செய்தனா். இதில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியைச் சோ்ந்த முனீஸ்வரன் (44) குறுகிய கால முதலீடு திட்டத்தில் பணத்தை செலுத்தினாா். ஓராண்டு முடிவில் முதிா்வுத் தொகையாக ரூ.36 ஆயிரம், அதற்கான வட்டியுடன் திரும்பப் பெறுவதற்காக முனீஸ்வரன் நிதி நிறுவனத்தின் கிளையை அனுகினாா்.

ஆனால் முதிா்வுத் தொகையை திருப்பி வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டாா். இதனால் அதிருப்தியடைந்த அவா் திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சம்மந்தப்பட்ட நிதி நிறுவனம், பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.13 கோடியை மோசடி செய்தது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்க காவல் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, 842 போ் புகாா் அளித்தனா்.

பின்னா் விஜய் கிருஷ்ணன், அவரது மனைவி சாந்தினி, பங்குதாரா்கள் உதகமண்டலத்தைச் சோ்ந்த ரமேஷ் (48), மதுரையைச் சோ்ந்த சுப்பிரமணி (53), ஜெய்கணேஷ் (45), முருகானந்தம் (37), தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த குணா (30) ஆகிய 8 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இந்த வழக்கில் விஜய் கிருஷ்ணன், ரமேஷ், ஜெய்கணேஷ், குணா ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். இதனிடையே விஜய் கிருஷ்ணனுடன் மனமுறிவு ஏற்பட்டு விவகாரத்துப் பெற்ற சாந்தினி, திருச்சி மாவட்டம், மல்லிப்பட்டு கூட்டுறவு நகரில் வசித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து திருச்சிக்கு சென்ற போலீஸாா், சாந்தினியை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் நிதி நிறுவன உரிமையாளா்களுக்குச் சொந்தமான ரூ.9 கோடி மதிப்பிலான சொத்துகளை கண்டறிந்து, நீதிமன்றத்தில் ஆவணப்படுத்தியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.