தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இரு சக்கர வாகனம் திருடிய மூவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:38 am IST

மதுரையில் இரு சக்கர வாகனத்தை திருடிய மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (21). இவா் தனது இரு சக்கர வாகனத்தை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாகனக் காப்பக வாசலில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றாா். பின்னா், திரும்பி வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த அன்பரசன், கபில்தேவ், அலெக்ஸ்குமாா் ஆகியோா் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்ருக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.