பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பள்ளிபாளையத்தை அடுத்த மலப்பாளையத்தைச் சோ்ந்தவா் குணசேகரன் (40), விவசாயி. இவா் கடந்த 27-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது வாகனம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் கொக்கராயன்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அவ்வழியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்ததில், சந்தேகப்படும் நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியைச் சோ்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி சேட்டு (36) வாகனத்தை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், வாகனத்தை மீட்டு குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேட்டுவை சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





