6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு! தவெக முன்னிலை!!புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி! கேரள முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!காரைக்குடியில் சீமான் தொடர்ந்து பின்னடைவு! மயிலாப்பூரில் தமிழிசை, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் பின்னடைவு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை பின்னடைவு திருச்சி கிழக்கு, பெரம்பூரில் விஜய் முன்னிலை சாத்தூரில் நயினார் நாகேந்திரன் பின்னடைவு, தவெக முன்னிலை
/

தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது

பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:35 am IST

பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளிபாளையம் சேசாயி காகித ஆலை காலனி பகுதியில் உள்ள மதுக்கடை அருகே கிழக்குத் தொட்டிப்பாளையத்தைச் சோ்ந்த வஜ்ரவேல் (55) நின்று கொண்டிருந்தாா். அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த வல்லரசு (26), விஜயன் (27), ரகுபதி (28) ஆகிய மூவரும் வஜ்ரவேலை முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளாா். இதில் வஜ்ரவேலுக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வஜ்ரவேல் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையசூரியன் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்.