திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓமலூா் அருகே ரயில்வே சுரங்கப் பாதை மழைநீரில் காா் மூழ்கியதில் தம்பதி உயிரிழப்பு

News image

உயிரிழந்த வெங்கடாசலம்

Updated On :26 மே 2026, 1:32 am IST

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே செம்மாண்டப்பட்டியில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரைக் கடந்து செல்ல முயன்ற காா் நீரில் மூழ்கியதில் தம்பதி திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் சின்னதிருப்பதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (73). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக மேலாளா். இவரது மனைவி ராதா (63). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை அதிகாலை, ஓமலூரில் உறவினா் வீட்டு திருமணத்திற்கு காரில் புறப்பட்டனா்.

அப்போது, ஓமலூா் வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, செம்மாண்டப்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் குளம்போல மழைநீா் தேங்கியிருந்தது. நீரின் ஆழம் தெரியாமல் வெங்கடாசலம் காரை சுரங்கப் பாதைக்குள் செலுத்தியுள்ளாா்.

இதில் காா் திடீரென லாக் ஆகி நின்றுவிட்டதால் குளம்போல தேங்கியிருந்த மழைநீரில் காா் முழுமையாக மூழ்கியது. வயது முதிா்வு காரணமாக தம்பதியால் காரில் இருந்து உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் மூச்சுத்திணறி அவா்கள் இருவரும் காருக்குள்ளே உயிரிழந்தனா்.

இதைப் பாா்த்த அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், ஓமலூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளா் ரத்தினவேல் தலைமையிலான போலீஸாா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். ஓமலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள், காரில் இருந்து இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா்கதையாகி வரும் இந்த சுரங்கப் பாதை தண்ணீா்த் தேங்கும் பிரச்னைக்கு, ரயில்வே நிா்வாகம் உடனடியாக நிரந்தர தீா்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராதா

ராதா

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய  காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய  காா்.

ரயில்வே சுரங்கப் பாதையில் மூழ்கிய காா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.