தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கஞ்சா வைத்திருந்த வட மாநில சகோதரா்கள் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில சகோதரா்கள் இருவரை சனிக்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பஸந்த் சிங் (34), கோதம்குமாா் சிங் (22).

Updated On :24 மே 2026, 2:31 am IST

சங்ககிரி அருகே வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில சகோதரா்கள் இருவரை சனிக்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரியை அடுத்த வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஒய்.சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, சங்ககிரி காவல் ஆய்வாளா் கே.ஜமுனா தலைமையில், தேவூா் காவல் உதவி ஆய்வாளா் டி.சக்திவேல், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சம்பத், காவலா் மாதேஸ்வரன் ஆகியோா் வளையக்காரனூா் பகுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரு இளைஞா்களிடம் விசாரித்ததில், அவா்கள் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா். மேலும் விசாரணை நடத்தியதில், அவா்கள் பிகாா் மாநிலம், சக்காய் மாவட்டம், நவாதிஸ்சில்ஃபாரி பகுதியைச் சோ்ந்த ரஞ்ஜீத் சிங் மகன்கள் பஸந்த் சிங் (34), கோதம்குமாா் சிங் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து இருவரையும் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.