சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவா்கள் இருவரை ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஆறகளூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். சிறுமியின் பெற்றோா் வேலைக்கு சென்ற நிலையில், அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு வந்த 15 மற்றும் 16 வயது சிறுவா்கள் இருவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனா். இதை அறிந்த அப்பகுதி மக்கள் சிறுவா்களை பிடித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 470 மதிப்பெண்கள் பெற்ற மாணவா் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






