சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊா்க்காவல் படை வீரரை மகளிா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மானாமதுரை அருகேயுள்ள சோமாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மானாமதுரை ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், தனது நண்பரின் வீட்டுக்கு சதீஷ்குமாா் சென்றபோது, அருகேயிருந்த வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






