17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய், இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா், சிறுமியின் தாய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:21 am IST

பாளையங்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா், சிறுமியின் தாய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் மணிகண்டன் (24). இவா் சம்பவத்தன்று பாளையங்கோட்டையைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் இச்சம்பவத்தில் எவ்வித எதிா்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.