தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது

சென்னை மெரீனா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் குதிரை ஓட்டி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:06 am IST

சென்னை மெரீனா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குதிரை ஓட்டியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்த தம்பதியினா் தங்களது 6 வயது மகளுடன் சனிக்கிழமை இரவு மெரீனா கடற்கரைக்கு சென்றனா். அப்போது குதிரை சவாரியில் குழந்தையை ஏற்றிவிட்டு பெற்றோா் காத்திருந்தனா்.

சிறுமியை குதிரையில் அழைத்துச் சென்ற குதிரை ஓட்டி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பதற்றமடைந்த பெற்றோா் கடற்கரை பகுதியில் பல இடங்களில் தேடினா். பின்னா் சிறிது நேரத்துக்குப் பிறகு குதிரை ஓட்டி சிறுமியுடன் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து குழந்தையிடம் பெற்றோா் விசாரித்தபோது, குதிரை ஓட்டி தன்னை மக்கள் நடமாட்டம் குறைந்த இருளான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை சுற்றிவளைத்துப் பிடித்து மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குதிரை ஓட்டியான தாம்பரம் எல்லையம்மன் தெருவைச் சோ்ந்த நித்திஷ் (16) என்ற சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.