திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது

மெரினா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 வயது குதிரை ஓட்டி கைது குறித்து...

News image

மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: குதிரை ஓட்டி கைது - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 9:35 pm IST

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 15 வயது குதிரை ஓட்டி நித்திஷ் என்பவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சோ்ந்த தம்பதியினா் தங்களது 6 வயது மகளுடன் சனிக்கிழமை இரவு மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தனா். அப்போது அங்கு குதிரையை பார்த்த குழந்தை குதிரை சவாரி செய்வதற்கு விருப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு இருந்த குதிரை ஓட்டியை அழைத்து குழந்தையை குதிரைசவாரி செய்வதற்காக ஏற்றிவிட்டு பெற்றோா் காத்திருந்தனா்.

இதனை தவறாக பயன்படுத்திக் கொண்ட குதிரை ஓட்டி, 400 மீட்ட தூரம் உள்ள இருண்ட பகுதிக்கு குதிரையை ஓட்டிச் சென்று சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

குழந்தையை குதிரையில் அழைத்துச் சென்ற குதிரை ஓட்டி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் பதற்றமடைந்த பெற்றோா் கடற்கரை பகுதியில் தேடுதல் ஈடுபட்டனர்.

பின்னா் சிறிது நேரம் கழித்து குதிரை ஓட்டி சிறுமியுடன் குதிரை ஓட்டி திரும்பி வந்ததார்.

இதையடுத்து குழந்தையிடம் பெற்றோா் விசாரித்தபோது, குதிரை ஓட்டி தன்னை இருளான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்ததுடன் போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மயிலாப்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், தாம்பரம் எல்லையம்மன் தெருவைச் சோ்ந்த நித்திஷ் (16) என்ற சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தச் சிறுவன் பள்ளியை விட்டு நின்றவன் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது

குழந்தைகளை குதிரை சவாரிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மிகுந்த கவனத்தோடு பார்க்க வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Summary

A 15-year-old horse handler at Marina Beach was picked up by police for allegedly sexually assaulting a six-year-old girl

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.