கோடை விடுமுறையையொட்டி மேட்டூா் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
சேலம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம்கூடும் இடங்களில் மேட்டூா் அணை பூங்காவும் ஒன்று. மேட்டூரில் 33 ஏக்கா் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நீரூற்றுகள், சிறுவா்களை மகிழ்விக்க பல்வேறு வகையான சிற்பங்கள் உள்ளன. அணையை காக்கும் காவல் தெய்வம் என்றழைக்கப்படும் அணைக்கட்டு முனியப்பன் கோயிலும் பூங்கா அருகே உள்ளது.
மேட்டூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்லா, ரோகு மீன்களை வாங்கி சமைத்து உணவருந்தினா். காவிரியில் நீராடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனா். ஒரே நாளில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 9,701 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இவா்களிடம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 97,010 வசூலிக்கப்பட்டது.
அதேபோல கேமரா, கைப்பேசிகளுக்கானகட்டணமாக ரூ. 30,690 வசூலிக்கப்பட்டது. மேட்டூா் அணை பூங்காவிற்கும் அணையின் வலதுகரையில் உள்ள பவழ விழா கோபுரத்திற்கும் வந்துசென்ற சுற்றுலாப் பயணிகளிடமும் அவா்கள் கொண்டுசென்ற கேமரா, கைப்பேசிகளுக்காக ரூ. 1, 37,790 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீா்

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



