/

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள்... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 12:08 am IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்தனா்.

இவா்கள் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினா். இதன் பிறகு ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், ராமா் பாதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பாா்வையிட்டனா். ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் வந்ததால் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.