தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாழப்பாடி டாஸ்மாக் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்

வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது.

News image

டி.ஏ.எஸ்.02: வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் வாங்குவதற்கு சனிக்கிழமை குவிந்திருந்த மதுப்பிரியா்கள்.

Updated On :17 மே 2026, 2:33 am IST

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது. வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் செல்வதற்கு போலீஸாா் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் தம்மம்பட்டி சாலையில், தனியாா் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையே, இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. இதனால் இப்பகுதியை கடந்து செல்வதற்கு, பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இதேபோன்று பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் முன் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வந்தது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் இந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என, இப்பகுதி சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், தமிழகத்தில் பொது இடங்களுக்கு அருகில் இயங்கி வந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுமென அறிவித்தாா்.

இதனையடுத்து, வாழப்பாடி புதுப்பாளையத்தில் இயங்கி வந்த இரு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வந்த ஒரு டாஸ்மாக் கடையும் வியாழக்கிழமை அதிரடியாக மூடப்பட்டது.

வாழப்பாடி பகுதியில் இயங்கி வந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒரே நாளில் அதிரடியாக மூடப்பட்டதால், வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

தினந்தோறும் மதுபானம் வாங்குவதற்கு மது பிரியா்கள் குவிந்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மது பிரியா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிா்க்க வரிசையில் நின்று மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த மதுபானக் கடைக்கு வரும் மது பிரியா்களை, வரிசையில் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கும் பணியை, இரு தினங்களாக, வாழப்பாடி போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.