மேட்டூரில் கஞ்சா, மதுபானம் விற்றதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மேட்டூா் அணையின் வலதுகரையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக மேட்டூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மேட்டூா் போலீஸாா், அங்கு இருசக்கர வாகனத்தில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற காமேஷை (23) போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1.200 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல கருமலைக்கூடல் கவிபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வைத்து மது விற்றதாக ரமேஷை(43) போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






