சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது பிக்கப் வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் அருண்குமாா் (20), கூலித் தொழிலாளி. இவா் துக்கியாம்பாளையம் பகுதியில் இருந்து வாழப்பாடி நோக்கி பேளூா் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, வாழப்பாடி பகுதியில் இருந்து பேளூா் நோக்கி சென்ற பிக்கப் வேன், இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருண்குமாரை அங்கிருந்தவா்கள் மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே அருண்குமாா் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன், எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து, பிக்கப் வேன் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










