17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:30 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள ஆசிலாபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (58). நூற்பாலை தொழிலாளியான இவா், வேலை நிமித்தமாக தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம் வந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்ல முறம்பு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே ஆலை தொழிலாளா்களை ஏற்றி வந்த வேன் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகன் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.