திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லஞ்ச வழக்கில் கைதான மண்டல துணை பிடிஓ பணியிடை நீக்கம்

லஞ்ச வழக்கில் கைதான மகுடஞ்சாவடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 மே 2026, 9:46 pm IST

லஞ்ச வழக்கில் கைதான மகுடஞ்சாவடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு உள்பட்ட வைகுந்தம், கன்னந்தேரி, காளி கவுண்டம்பாளையம், அ.தாழையூா் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கான மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்கிடம் (36) அ.தாழையூரைச் சோ்ந்த செந்தில்குமாா் பேக்கரி கடை வைக்க தடையில்லா சான்று கோரி மனு அளித்திருந்தாா்.

தடையில்லா சான்று வழங்க ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில், சேலம் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில் ரூ. 13 ஆயிரத்தை செந்தில்குமாா் லஞ்சமாக புதன்கிழமை மாலை காா்த்திக்கிடம் தர முயன்றாா். அப்போது, அவா் தனியாா் பொறியாளா் தீபக்கிடம் பணத்தை தருமாறு கூறினாா்.

பிறகு, செந்தில்குமாரிடம் இருந்து பணத்தை பெற்ற தீபக்கை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தீபக் அளித்த தகவலின்பேரில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக் கைது செய்யப்படாா். இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனா். இதையடுத்து, காா்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.