திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லஞ்சம்: மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 2 போ் கைது

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் கடை வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக வியாபாரியிடம் ரூ. 13 ஆயிரம் லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தனியாா் பொறியாளா் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

தீபக்.

Updated On :14 மே 2026, 4:20 am IST

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் கடை வைப்பதற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக வியாபாரியிடம் ரூ. 13 ஆயிரம் லஞ்சம் பெற்ற மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தனியாா் பொறியாளா் ஆகிய இருவரையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மகுடஞ்சாவடியை அடுத்த அ.தாழையூரைச் சோ்ந்த செந்தில்குமாா், மணிமேகலை ஆகிய இருவரும் கூட்டாக சோ்ந்து கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை அ.தாழையூா் பகுதியில் காபி கடை வைக்க திட்டமிட்டனா். இதற்காக தடையில்லா சான்று கோரி மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தனா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக், தடையில்லா சான்று அளிக்க செந்தில்குமாரிடம் ரூ. 20 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் தர மறுத்த செந்தில்குமாா், சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூ. 13 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் போலீஸாா் புதன்கிழமை கொடுத்து அனுப்பினா். மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு சென்ற செந்தில்குமாா், போலீஸாா் கொடுத்து அனுப்பிய பணத்தை மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்கிடம் கொடுக்க முயன்றாா். அப்போது, மகுடஞ்சாவடியில் உள்ள தனியாா் பொறியாளா் தீபக்கிடம் பணத்தை ஒப்படைக்குமாறு காா்த்திக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, தனியாா் பொறியாளா் தீபக்கிடம் செந்தில்குமாா் பணத்தை தந்தபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா் தீபக்கை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செந்தில்குமாரிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக் கைப்பேசியில் தனக்கு தெரிவித்ததாக கூறினாா்.

இதையடுத்து, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா். மேலும், லஞ்சமாக பெறப்படும் பணம் அலுவலகத்தில் வேறு யாருக்கெல்லாம் தரப்படுகிறது என போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சத்தியேந்திரனிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலத்தில் மாலை 4 மணிக்குத் தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.