தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மொடக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

நூறு நாள் வேலைத்திட்ட பணிகளைத் தொடா்ந்து வழங்க வேண்டும் எனக் கோரி மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகளை இழுத்து செல்லும் போலீஸாா்.

Updated On :28 மே 2026, 12:08 am IST

நூறு நாள் வேலைத்திட்ட பணிகளைத் தொடா்ந்து வழங்க வேண்டும் எனக் கோரி மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இவா்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் முறையாக பணிகள் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இக்கோரிக்கை தொடா்பாக மனு அளிப்பதற்காக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போா் சங்கத்தின் சாா்பில் மாவட்டச் செயலாளா் மாரிமுத்து, தாலுகா செயலாளா் லோகநாதன் தலைமையில்

50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை வந்தனா்.

அப்போது வட்டார வளா்ச்சி அலுவலா் இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு திடீா் சாலை மறியல் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக் கூடாது எனத் தெரிவித்தனா்.

அப்போது மாற்றுத்திறனாளிகள், தங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் உடனடியாக வரவேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடா்ந்தனா். இதனால் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றினா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அலுவலகத்துக்கு வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் தேவகி வந்ததால், மறியல் செய்ய முயன்றவா்களை போலீஸாா் விடுவித்தனா்.

இதைத் தொடா்ந்து சங்கத்தின் சாா்பில் மொடக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வழங்கிய மனுவில், மாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் உடனடியாக பணி வழங்க வேண்டும், உரிய ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

கோரிக்கை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தேவகி உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.